Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுச்சேரியில் தீவிரம்: 24 மணி நேரத்தில் 2,093 பேருக்கு கொரோனா!

புதுச்சேரியில் தீவிரம்: 24 மணி நேரத்தில் 2,093 பேருக்கு கொரோனா!
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (11:42 IST)
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக ஆயிரத்திற்கு கீழ் குறைந்து இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 2 லட்சத்தை தாண்டியுள்ளது. 
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 2,093 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,40,710 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,893 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை