Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி! – காங்கிரஸ்

Webdunia
புதன், 4 மே 2022 (13:02 IST)
இலங்கை மக்களுக்கு பொருளாதார உதவி செய்ய நிதி வழங்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ள நிலையில் காங்கிரஸ் நிதியளிப்பதாக அறிவித்துள்ளது.

 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பலர் படகுகள் மூலமாக தமிழகத்தை நோக்கி வருவதும் அதிகரித்துள்ளது.
 
இலங்கை தமிழர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், மக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இலங்கை தமிழர்களுக்கு உதவ நிதியளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு உதவ ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி அனுப்பும் முதல்வரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments