Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (18:34 IST)
நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள கல்லடி சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி தனது பெற்றோர் கல்லூரி கட்டண செலுத்த முடியாததால்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள கல்லடி சிதம்பரபுரம் பகுதியில் வசிப்பவர் முத்துக்குமார் (53). இவருக்கு 2 மகள்களும், 1 மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், இவரது மகள் பொன்னாக்கடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள நிலையில்,இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாகச் செலுத்தியதாகத் தெரிகிறது. குடும்ப சூழ் நிலையில் சிரமத்திற்கு இடையில்  மகள் படிப்பிற்கு கல்விக் கட்டண செலுத்துவதை எண்ணி மாணவி மனவேதனை அடைந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை தன் வீட்டில் அறைக்கதவை மூடி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவி இறப்பதற்கு முன்  ஒரு கடிதம் எழுதிவைத்துள்ளார். அதில், தனது படிப்பு செலவுக்குப் பெற்றோர் செலவுக்காக சிரமப்படுவதால் தற்கொலை செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments