Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாமன் மகனுடன் திருமணம்.. ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி!

dead
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (18:35 IST)
மாமன் மகனை திருமணம் செய்து வைக்காமல் பெற்றோர் காலதாமத படுத்தியதால் ஓடும் ரயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை என்ற பகுதியைச் சேர்ந்த கிருத்திகா தனியார் கல்லூரி ஒன்றில் 3வது ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது மாமன் மகனை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் தனக்கு மாமன் மகனை திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டு கொண்டு உள்ளார்
 
ஆனால் பெற்றோர் திட்டவட்டமாக மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கிருத்திகா கல்லூரிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது மாமன் மகனிடம் போனில் பேசிவிட்டு திடீரென ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து கிருத்திகா உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி படிப்பு முடிந்த உடன் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறிய நிலையில் உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கிருத்திகா படம் பிடித்ததாகவும் இதனால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசு -தினகரன்