Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் மீது குண்டாஸ்!

Gundas
, சனி, 5 நவம்பர் 2022 (12:28 IST)
சென்னை பெரம்பூரில் கல்லூரி மாணவி சத்யாவை கல்லூரி மாணவர் சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக காதலித்த கல்லூரி மாணவர் சதீஷ் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார் 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்பதும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில்  முதல் முறையாக சிபிசிஐடி பரிந்துரையின் பேரில் சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் சதீஷ் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சதீஷ்க்கு ஜாமீன் கிடைக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஒத்திவைப்பு!: