Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரி பாதிரியார் மீது மேலும் ஒரு கல்லூரி மாணவி பாலியல் புகார்: 6 பிரிவுகளில் வழக்கு

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (13:19 IST)
கன்னியாகுமரி பாதிரியார் மீது மேலும் ஒரு கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்துள்ளதை அடுத்து அவர் மீது ஆறு பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
குமரி மாவட்டம் கொல்லங்கோடு என்ற பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோ கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றி வந்த நிலையில் இளம்பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் பழகி ஆபாசமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் செய்திகள் வெளியானது.
 
இதனை அடுத்து நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பாதிரியார் பெனடிக் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கல்லூரி மாணவி பாதிரியார் பெனடிக் மீது சைபர் கிரைம் போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
 
செல்போனில் தன்னிடம் சேட்டிங் செய்தபோது தவறான தகவல்களை பகிர்ந்ததாகவும் அவரது நடவடிக்கை பிடிக்காததால் அவரது தொடர்பை துண்டித்த நிலையில் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்