Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்திய இளம்பெண்: திடீரென கழுத்தை அறுத்து கொண்டதால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (08:18 IST)
கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்திய இளம்பெண்: திடீரென கழுத்தை அறுத்து கொண்டதால் பரபரப்பு!
கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்திய இளம்பெண் ஒருவர் போலீசார் கண்டித்ததால் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பெண் என்ஜினீயர் ஒருவர் பழகி உள்ளார். முதலில் சாதாரண நட்பாக பழகிய இருவரும் அதன்பின் லெஸ்பியன் உறவில் இருந்ததாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து கல்லூரி மாணவியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். பெண் எஞ்சினியரை சந்திக்க கூடாது என்றும் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் திடீரென இருவரும் வேறு ஊருக்கு சென்று வீடு எடுத்து குடும்பம் நடத்தியதாக தெரிகிறது. 
 
இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து கவுன்சிலிங் கொடுத்தனர். கவுன்சிலிங்கிற்கு பிறகு கழிவறை செல்வதாகக் கூறிய இளம்பெண் கழிவறையில் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டதாக தெரிகிறது.
 
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments