Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘சவுக்கு’ சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை எப்போது ?

‘சவுக்கு’ சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை எப்போது ?
, வியாழன், 3 நவம்பர் 2022 (21:30 IST)
‘சவுக்கு’ சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பத்திரிகையாளரான சவுக்கு சங்கர், சமீபத்தில் ஊடகங்களில் பேட்டி அளித்தபோது, ஒரு நீதிபதி பற்றி அவமதிக்கும் வகையில் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்

இந்த நிலையில் இந்த வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்றிருக்கும் சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்..

இந்த   நிலையில், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்திருந்த அவரது மேல்முறையீடு வழக்கு வரும் 11-11-22 அன்று விசாரணைக்கு வரவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.  

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''இம்ரான் கானை கொல்ல விரும்பினேன்''- துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் வாக்குமூலம்