Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் கண் விழித்த ஐயப்பன் சிலை! – வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (15:46 IST)
கோயம்புத்தூரில் உள்ள கோவில் ஒன்றில் ஐயப்பன் சிலை கண் திறந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூர் செல்வபுரம் தில்லை நகரில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் ஐயப்பனுக்கும் தனி சன்னிதானம் உள்ளது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் இந்த சன்னிதானத்தில் பூஜை செய்கின்றனர்.

அந்த வகையில் இந்த கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது. அப்போது ஐயப்பன் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதை அங்கிருந்த சிலர் படம் பிடித்தனர். பின்னர் வீடியோவை பார்த்தபோது அதில் அபிஷேகத்தின்போது ஐயப்பன் சிலையின் கண்கள் மெல்ல திறப்பது போல தெரிந்துள்ளது. இதை சமூக வலைதளங்களில் பலரும் தீவிரமாக ஷேர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments