Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

Mahendran
வெள்ளி, 28 மார்ச் 2025 (12:12 IST)
நமக்கு ரூல்ஸ் போட்டவர்களை ஒரே ஒரு ரூ போட்டு ஓட வைத்தவர் நமது முதல்வர் ஸ்டாலின் என துணை முதலமைச்சர் உதயநிதி இன்று சட்டப்பேரவையில் பேசினார்.
 
பாசிஸ்டுகள் எத்தனை ரூல்ஸ் போட்டு தமிழ்நாட்டை அடக்க நினைத்தாலும், பட்ஜெட்டில் ஒரே ஒரு ரூ போட்டு அவர்களை அலற வைத்துவிட்டார் நமது முதல்வர் என்று தெரிவித்தார்.
 
மேலும், சென்னையில் கார்பந்தயம் நடத்துவதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் வந்தன. ஆனால், எதிர்த்தவர்களை பாராட்டும் அளவுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது என்று கூறிய துணை முதல்வர், "வெற்றிக்கு முன்பே தகுதி உள்ள வீரர்களை கொண்டாடினோம்" என்றும் தெரிவித்தார்.
 
எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டபோது, அதற்கு நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அவையில் இருப்பதில்லை என்றும், தொடர்ந்து இதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்தார். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நான் பேசும் போதெல்லாம் அவையில் இருப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments