Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிர்மலா சீதாராமனுடன் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சந்திப்பு: என்ன காரணம்?

நிர்மலா சீதாராமனுடன் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சந்திப்பு: என்ன காரணம்?
, ஞாயிறு, 2 ஜூலை 2023 (07:29 IST)
சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்த நிலையில் அவரை சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 
இந்த சந்திப்பின்போது கனகசபை உள்ளிட்ட உவகாரங்களுக்கு ஆலோசனை நடந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மஞ்சன திருவிழா நடைபெற்ற போது பக்தர்கள் யாரும் கனக சபை மீதேறி  சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் தெரிவித்தனர். 
 
ஆனால் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தீட்சிதர்கள் நிபந்தனையை மீறி கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்தனர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிதம்பரம் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னைக்கு வந்த போது அவரை தீட்சிதர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது கனகசபை பிரச்சனை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்விட்டர் பயனாளர்களுக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்..! ப்ளூ டிக் பயனாளிகளுக்கு மட்டுமே எல்லாம்..!