Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிதம்பரம் வீட்டில் ஒளிந்திருந்தார்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை - தமிழிசை விமர்சனம்

சிதம்பரம் வீட்டில் ஒளிந்திருந்தார்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை - தமிழிசை விமர்சனம்
, வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (15:23 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். இந்த வழக்கில் சிதம்பரத்தைக் கைது செய்ய இருந்த தடையை நீக்கி முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்தது. 
இதையடுத்து சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் பரவவே நேற்று மாலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ப. சிதம்பரம் தன்விளக்கப் பேட்டி கொடுத்தார். இதனையடுத்து நேற்று அவரது வீட்டுச் சுவர் ஏறிக் குதித்த சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை செய்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்வால் நடத்தப்பட்ட கைது நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தஞ்சையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட  அக்கட்சியின் தலைவர்  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். 
செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது : சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகளுக்கு  ஊழல் கட்சிதான் துணைநிற்கும். ஊழல் வழக்கின் விசாரணைக்கான அழைத்துச் செல்லப்பட்டுள்ள ப. சிதம்பரத்தின் மீது 4 வழக்குகள் உள்ளன. மேலும் சிதம்பரம் வீட்டில் ஒளிந்திருந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், 27 மணி நேரத்துக்கு பின்னர் அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர் என தெரிவித்தார். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்வெளிக்கு செல்லும் முதல் மனித ரோபோ!!