Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண்கள் இலவச வாகன உதவி செய்யும் சென்னை இளைஞர்!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (19:57 IST)
கர்ப்பிணி பெண்கள் இலவச வாகன உதவி
சென்னை ஆவடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்திலும் இலவச வாகன சேவை செய்து வருவதால் பெரும் பாராட்டுதலைப் பெற்று வருகிறார் 
 
சென்னை ஆவடியை சேர்ந்த லியோ ஆகாஷ்ராஜ் என்ற இளைஞர் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து மொத்தம் மூன்று வாகனங்களை கர்ப்பிணி பெண்களுக்காக இலவச சேவை செய்ய பயன்படுத்தி வருகிறார் 
 
இவர் தனது மொபைல் எண்ணான 9600432255 என்ற எண்ணை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த எண்களை பார்த்து கர்ப்பிணி பெண்கள் கால் செய்யும் பொழுது அவர்களுக்கு உடனடியாக வாகனங்களை அனுப்பி மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்கிறார். இதற்காக இவர் ஒரு பைசா கூட பெற்றுக்கொள்வதில்லை
 
கடந்த 13 நாட்களில் இவர் 53 கர்ப்பிணி பெண்களை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்து உள்ளதாகவும் அவர்களில் 23 பேர் சுகப்பிரசவம் அடைந்து குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து கருத்து தெரிவித்த லியோ ஆகாஷ்ராஜ், ‘இந்த ஊரடங்கு நேரத்தில் என்னால் முடிந்த சிறு உதவியை கர்ப்பிணி பெண்களுக்கு செய்து தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த இலவச வாகன சேவையை கர்ப்பிணி பெண்கள் பாராட்டி வருகின்றனர். இந்த உதவியை பெற்ற பலர் வாட்ஸ்அப் தங்களது வாட்ஸ்அப் குரூப்களில் அவரது எண்ணை பதிவு செய்து அவரது சேவையைப் பயன்படுத்த பரிந்துரை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments