Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹோலி பண்டிகை விடுமுறை: சென்னை-நாகா்கோவில் சிறப்பு ரயில்.. முன்பதிவு எப்போது?

Train

Siva

, வெள்ளி, 8 மார்ச் 2024 (07:23 IST)
ஹோலி பண்டிகை விடுமுறையை ஒட்டி சென்னை முதல் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் போலி பண்டிகை மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது வழக்கமான ஒன்று என்பது தெரிந்தது. அந்த வகையில் ஹோலி பண்டிகை சிறப்பு ரயிலாக  நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கேரளா வழியாக சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளன

 நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மார்ச் 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அதேபோல் மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மார்ச் 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ரயில்  நாகர்கோவில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் இந்த ரயிலுக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?