நடுவழியில் திடீரென நின்ற சென்னை மெட்ரோ ரயில்.. பயணிகள் மத்தியில் பதட்டம்..!

Siva
செவ்வாய், 2 டிசம்பர் 2025 (08:16 IST)
சென்னை மெட்ரோ ரயில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால், அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகருக்கு இன்று காலை புறப்பட்ட மெட்ரோ ரயில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் உள்ளே சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால், மெட்ரோ ரயில் சேவை மீண்டும் சீரானது என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

சென்னையில் இரண்டாவது நாளாக கனமழை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்..!

நடுவழியில் திடீரென நின்ற சென்னை மெட்ரோ ரயில்.. பயணிகள் மத்தியில் பதட்டம்..!

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments