Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ: ₹1,963 கோடி நிதி ஒதுக்கீடு..!

Advertiesment
மெட்ரோ

Mahendran

, புதன், 3 செப்டம்பர் 2025 (18:05 IST)
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக, தமிழக அரசு ₹1,963.63 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பு, தென் மாவட்ட பயணிகளுக்கும், சென்னையின் போக்குவரத்துக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
 
இந்த புதிய மெட்ரோ ரயில் பாதை சுமார் 15 கி.மீ. நீளம் கொண்டது. இந்த புதிய வழித்தடத்தில் 13 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.இந்தத் திட்டம், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு செல்லும் தென் மாவட்டப் பயணிகளுக்கு ஒரு வசதியான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யும்.
 
இந்தத்திட்டம் குறித்த மேலும் பல தகவல்கள் மற்றும் முழுமையான வடிவமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர்கள் பணி.. இன்றே விண்ணப்பிக்க தயாராகுங்கள்..!