Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்: பயணிகள் அவதி

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (22:12 IST)
சென்னையின் வரப்பிரசாதங்களில் ஒன்றான மெட்ரோ ரயில் தற்போது சென்னை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கட்டணம் சிறிது அதிகமாக இருந்தாலும் குளுகுளு பயணம், குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு சென்றடைவது, பார்க்கிங் வசதி, ஆட்டோ வசதி என பல சிறப்பு அம்சங்கள் இந்த மெட்ரோ ரயிலில் உள்ளது.
 
இந்த நிலையில் உயர் மின் அழுத்த கோளாறு காரணமாக விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு கொடுப்பதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
உயர் மின் அழுத்த கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் வழக்கம்போல் மெட்ரோ ரயில் கூடிய விரைவில் இயங்கும் என்றும் மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நாளை காலைக்குள் உயர் மின் அழுத்த கோளாறு சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments