Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

4 மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:16 IST)
இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழை 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும்,  அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்விட்டரில் விரைவில் வீடியோ கால் வசதி: எலான் மஸ்க் அறிவிப்பு..!