Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூரில் கொட்டித்தீர்ந்தது கனமழை! மக்கள் மகிழ்ச்சி

karur
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (20:30 IST)
குடி போதையில் ஒருவர் மழை பெய்கின்றதா ? என பார்த்து பார்த்து சென்ற காட்சி பரவலாகி வருகிறது.
 
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மாலை பொழுதில் திடீரென்று கார்மேகம் சூழ ஆங்காங்கே காட்சியளித்த நிலையில், இன்று இரவு 8.00 மணியளவில் கரூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்திகிராமம், தாந்தோன்றிமலை, காமராஜ் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சுமார் 30 நிமிடம் கனமழை வெளுத்து வாங்கியது.

சுமார் 30 நிமிட மழையிலேயே மார்க்கெட் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில் குடி போதையில் ஒரு முதியவர் மழை நின்றதா ? என்று பார்த்து பார்த்து சென்ற காட்சி மக்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இந்த திடீர் கனமழையால் ஆங்காங்கே மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமான மழை பெய்து வருகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரயான்-3: நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் கண்டுபிடிப்பு - மனிதன் சுவாசிக்க முடியுமா?