Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (14:39 IST)
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக இருந்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை முதல் லேசான மழை வர பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் இன்று ஏற்கனவே மூன்று மாவட்டங்களில் தமிழகத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் காலை தெரிவித்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இருப்பினும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments