Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்குவைக் கட்டுப்படுத்த என்ன செய்தீர்கள் – செக் வைத்த உயர்நீதிமன்றம் !

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (08:05 IST)
சென்னையில் அதிகளவில்  பரவி பல உயிர்களைப் பலிவாங்கிய டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை நகரில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் வருடா வருடம் பரவி வருகின்றன. டெங்கு காய்சலை பரப்பும் கொசுக்கள் அதிகளவில் கால்வாய்கள் மற்றும் சாக்கடைகளில் இருந்து உற்பத்தியாவதால்  கொசுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த கால்வாய்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி சூரிய பிரகாசம்  என்ற வழக்கறிஞர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது சம்மந்தமாக அறிக்கை வெளியிடக்கோரி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு ஓராண்டுக்குப் பின் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பிற்காக செலவழிக்கப்பட்டுள்ள நிதி குறித்து விளக்கப்பட்டது. அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் நிதி ஒதுக்கியது ஒரு புறம் இருக்கட்டும், ஆக்கப்பூர்வமாக செய்யப்பட்ட வேலைகள் குறித்து வரும் டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். அறிக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments