Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்குவைக் கட்டுப்படுத்த என்ன செய்தீர்கள் – செக் வைத்த உயர்நீதிமன்றம் !

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (08:05 IST)
சென்னையில் அதிகளவில்  பரவி பல உயிர்களைப் பலிவாங்கிய டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை நகரில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் வருடா வருடம் பரவி வருகின்றன. டெங்கு காய்சலை பரப்பும் கொசுக்கள் அதிகளவில் கால்வாய்கள் மற்றும் சாக்கடைகளில் இருந்து உற்பத்தியாவதால்  கொசுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த கால்வாய்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி சூரிய பிரகாசம்  என்ற வழக்கறிஞர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது சம்மந்தமாக அறிக்கை வெளியிடக்கோரி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு ஓராண்டுக்குப் பின் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பிற்காக செலவழிக்கப்பட்டுள்ள நிதி குறித்து விளக்கப்பட்டது. அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் நிதி ஒதுக்கியது ஒரு புறம் இருக்கட்டும், ஆக்கப்பூர்வமாக செய்யப்பட்ட வேலைகள் குறித்து வரும் டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். அறிக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments