Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்: போட்டி போட்டு அஞ்சலி செலுத்தும் அதிமுக-அம்முக

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (07:50 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானதை அடுத்து இன்று இரண்டாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதிமுக மற்றும் அமமுக தலைவர்கள் போட்டி போட்டு நினைவு ஊர்வலம், தர்ப்பணம் கொடுத்தல் ஆகியவைகளை நிகழ்த்தி வருவதால் பரபரப்பு ஏறப்ட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வெவ்வேறு நேரத்தில் அமைதி ஊர்வலம் நடத்தவுள்ளனர். முதலமைச்சர் எட்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர்கள் இன்று காலை பத்து மணிக்கு வாலாஜா சாலை வழியாக பேரணியாக சென்று இறுதியில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனையடுத்து வாலாஜா சாலை முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அமைதியாக ஊர்வலம் சென்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments