Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொதுக்குழு கூட்டம் செல்லும்! அதிர்ச்சியில் ஓபிஎஸ்! – நீதிமன்றம் உத்தரவு!

பொதுக்குழு கூட்டம் செல்லும்! அதிர்ச்சியில் ஓபிஎஸ்! – நீதிமன்றம் உத்தரவு!
, வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (11:28 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ல் இருந்த நடைமுறையே தொடரும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டமும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கிறார். அதேசமயம் கட்சியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதும் செல்லுபடியாகும் வாய்ப்பு என்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓரே மாதத்தில் 24 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம்!