Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு! எங்கெங்கு தெரியுமா?

சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு! எங்கெங்கு தெரியுமா?
, வியாழன், 21 மே 2020 (10:30 IST)
சென்னையில் கடந்த 14 நாட்களாக தொற்று கண்டறிப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 
 
தமிழகத்தில் நேற்று 743 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. 
 
கொரோனாவால் பாதிப்பு அடைந்த 743 பேர்களில் சென்னையில் மட்டும் 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8, 228 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், சென்னையில் கடந்த 14 நாட்களாக தொற்று கண்டறிப்படாத 379 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 
 
14 நாட்களாக புதிய நோய் தொற்று கண்டறியப்படாமல், அதிகப்படியான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது சென்னையில் இதுவே முதல்முறையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக் டாக் ரேட்டிங் குறைவதற்கு என்ன காரணம்? தடை செய்யப்படுமா செயலி?