Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழிப்பாட்டு தலங்களை திறந்தால் பிரச்சினை வரும்! – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
திங்கள், 18 மே 2020 (15:07 IST)
தமிழகத்தில் வழிப்பாட்டு தலங்களை திறக்க கோரி அளிக்கப்பட்ட மனுவின் மீதான விசாரணைக்கு பிறகு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த  மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் வழிபாட்டு தலங்கள், டாஸ்மாக் கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தொழிற்சாலைகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை செயல்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களையும் திறக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. மனு மீதான விசாரணைக்கு தமிழக அரசை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “தமிழகத்தில் வழிப்பாட்டு தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம்” என விளக்கம் அளித்துள்ளது.

அதை தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments