Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1,000 எட்டிய கோடம்பாக்கம்: சென்னையில் எகிறும் பாதிப்புகள்!!

1,000 எட்டிய கோடம்பாக்கம்: சென்னையில் எகிறும் பாதிப்புகள்!!
, திங்கள், 18 மே 2020 (10:28 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தமாக 6750 ஆக உயர்ந்துள்ளது.
 
சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி நேற்று தமிழகத்தில் 639 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 639 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 482 பேர் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6750 ஆக உயர்ந்துள்ளது. 
 
இதில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,041, திரு.வி.க. நகர் மண்டலத்தில் 790 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்கு கிழக்கே மையம் கொண்ட அம்பன் – அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியது!