Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்கலாமா? அமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்கலாமா? அமைச்சர் ஆலோசனை!
, திங்கள், 18 மே 2020 (12:24 IST)
தியேட்டர்களை திறப்பது குறித்து சென்னையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை.
 
நாட்டில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுக்காக்க நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களை தவிர்த்து மீத மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில், சினிமாத்துரையினருக்கு தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளாக ( (போஸ்ட் புரோடெக்‌ஷன் ) மட்டும் வரும் வரும் 11 ஆம் தேதிமுதல் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து சென்னையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை செய்து வருகிறார். தியேட்டர்களின் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் ஆலோசித்து வரும் நிலையில் இது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகளுக்கு கரண்ட் தருவது எங்க இஷ்டம்!– பிரதமருக்கு எடப்பாடியார் கடிதம்!