Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இரண்டு நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (09:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் பணிபுரியும் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அப்பகுதிகளுக்கு பயணிகள் சிரமமின்றி செல்ல சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 230 கூடுதல் பேருந்துகளை இன்றும், நாளையும் சென்னைக்குள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments