Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றைய நாளேடுகளில் திமுகவுக்கு எதிராக 4 பக்க விளம்பரங்கள்: அதிர்ச்சியில் திமுக!

Advertiesment
திமுக
, ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (08:56 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இன்று இரவு ஏழு மணி உடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்று இரவு 7 மணிக்கு மேல் நேரிலும் சமூக ஊடகங்களிலும் வானொலி தொலைக் காட்சியிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை வெளிவந்துள்ள அனைத்து முக்கிய நாளேடுகளிலும் திமுகவுக்கு எதிராக நான்கு பக்க 4 முழுப்பக்க விளம்பரங்கள் வந்துள்ளது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நிலங்கள் ஆக்கிரமிப்பு, இருளில் தடுமாறும் மக்கள், நீட் தேர்வை கொண்டு வந்தது யார், 2ஜி ஊழல், உட்கட்சி மோதலால் நடந்த கொலைகள், இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கதி போன்ற செய்திகள் அடங்கிய நான்கு பக்க விளம்பரங்கள் வந்துள்ளன. பிரச்சாரம் முடியும் கடைசி நாளில் வெளிவந்துள்ள இந்த விளம்பரங்கள் திமுகவுக்கு எதிராக திரும்புமோ என்ற அச்சத்தில் திமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக் கூறப்படுகிறது



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கக்காசுகளை பட்டுவாடா செய்த பாஜகவினர்: பறக்கும் படையினர் வந்தவுடன் ஓட்டம்!