Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனல்காற்று வீசும் என வானிலை மையம் கூறிய நிலையில் சென்னையில் மேகமூட்டம்!

Advertiesment
அனல்காற்று வீசும் என வானிலை மையம் கூறிய நிலையில் சென்னையில் மேகமூட்டம்!
, ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (08:41 IST)
அனல்காற்று வீசும் என வானிலை மையம் கூறிய நிலையில் சென்னையில் மேகமூட்டம்!
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அனல் காற்று வீசும் என்றும் வெப்பநிலை 5 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் இதனால் 12 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர் 
 
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை மெரீனா பீச்சில் இன்றும் மிதமான வானிலை நிலவியது என்பது குறைவான வெப்பநிலை தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இன்று மழை வர வாய்ப்பு உள்ளது போல் மேகமூட்டமாக இருப்பதால் இன்று மாலைக்குள் மழை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில், மேகமூட்டத்துடன் சென்னை கடற்கரை உள்ளது. இதேபோல் வரும் நாட்களிலும் வெப்பநிலையில் நல்ல வீழ்ச்சி இருக்கும்’ என்று கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எய்ம்ஸ் செங்கல் விவகாரத்தில் நன்றி கூறிய உதயநிதி: யாருக்கு தெரியுமா?