Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தனியார் கொரோனா சிகிச்சை மையம்! – மாநகராட்சி அனுமதி!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (12:04 IST)
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தனியார் உணவகங்கள், மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடுதல் கொரோனா சிகிச்சை பிரிவுகள், படுக்கைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில் பாதிப்புகள் மேலும் அதிகமாகி வருவதால் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவது குறித்து சென்னை மாநகராட்சிக்கு இமெயில் அனுப்பிவிட்டு பணியை தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments