3 மாத பெண் குழந்தையை ரூ.2.20 லட்சத்துக்கு விற்ற பெற்றோர் கைது.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வியாழன், 6 நவம்பர் 2025 (10:46 IST)
சென்னை, துரைப்பாக்கத்தில் மூன்று மாத பெண் குழந்தை ரூ.2.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குழந்தையின் பெற்றோர் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
கண்ணகி நகரை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் வினிஷா தம்பதி, ஏற்கனவே இரு குழந்தைகள் இருந்த நிலையில், நிதி ஆதாயத்திற்காக தங்களது மூன்றாவது குழந்தையை விற்க தீர்மானித்தனர். தரகர்கள் மூலம், திருவண்ணாமலையை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.2.20 லட்சத்துக்கு விற்கப்பட்டது.
 
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகர்க் காவல்துறையினர் விசாரணை நடத்தி, குழந்தையின் பெற்றோர் மற்றும் நான்கு இடைத்தரகர்கள் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். பணம் பெற்றதற்காக குழந்தையை விற்றது விசாரணையில் உறுதியானது.
 
குழந்தை வாங்கிய தம்பதியினரிடம் இருந்து மீட்கப்பட்டு, தற்போது குழந்தைகள் நலத்துறையின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயலில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காகித கப்பலில் கடல் தாண்ட முனைகிறார்.. ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்.. விஜய் குறித்து வைகோ

சென்னையில் பைக் பந்தயத்தால் நேர்ந்த சோகம்: மெதுவாக சென்றும் விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

மீண்டும் உயர்ந்த தங்கம்! இன்றைய விலை நிலவரம்!

வரதராஜ பெருமாள் கோவில் ‘தங்க பல்லி’ மாயம்? பரபரப்பு புகார்! - போலீஸ் விசாரணை!

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments