Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்தம்

சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்தம்
, செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (07:29 IST)
சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை சிக்னல் பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேர் சங்கம் அமைத்ததாக குற்றஞ்சாட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இன்று இதுகுறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சிக்னல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு. இருப்பினும் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
webdunia
போராட்டம் தொடர்ந்தாலும் தற்காலிக ஊழியர்கள் மூலம் மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயக்கப்படும் என்று கூறிய மெட்ரோ நிர்வாகம், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒருசில ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது பயணிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சரின் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக