Publish Date: Tue, 23 Apr 2019 (13:16 IST)
Updated Date: Tue, 23 Apr 2019 (13:19 IST)
திருவொற்றியூரில் உள்ள தியாகராயபுரத்தில் வசித்து வருபவர் செல்வம் (45). இவர் அருகில் உள்ள பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
தினம்தோறும் மதுகுடிப்பதை வழக்கமாகக் கொண்ட இவர் நேற்று மதியம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தூணில் ஏறி நின்று கொண்டு குடிக்க மது வேண்டும் இல்லையெனில் கீழே குடித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதனைப்பார்த்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் விரைந்த வந்த தீயணைப்புத்துறை மெதுவாக செல்வத்திடம் பேச்சுக் கொடுத்தபடி, செல்வத்துக்கு தெரியாமலேயே அவனை நெருங்கி பாதுகாப்புடன் மீட்டனர்.
காலைநிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டி இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என எச்சரித்து அனுபப்பட்டார்.