Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபிக்கு ரூ.6000 கோடி..! புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட இல்லை..

Mahendran
புதன், 23 ஜூலை 2025 (11:46 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கல்வி நிதியாக ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை  ஏற்காத தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்று மத்திய அரசு முன்னரே அறிவித்திருந்தது. இந்தச் சூழலில், புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டிற்கு, கடந்த நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், 2024-25 நிதியாண்டில் மொத்தம் ரூ.34,000 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு மட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கையை ஏற்காத கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மத்திய கல்வி அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
 
மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு பாகுபாடு, மாநில உரிமைகள் மற்றும் கல்வி சுதந்திரம் குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: நடைப்பயணம் தொடங்குகிறார் அன்புமணி..!

ரூ.14.69 கோடி போதை பொருளை கடத்தில் இளம்பெண்கள்.. சோப்புகளில் மறைத்து கடத்தல்..!

நாம வேலை பாக்கதான் வந்திருக்கோம்.. அவங்கள குஷிப்படுத்த இல்ல! - கார்ப்பரேட் டான்ஸ் வீடியோவிற்கு வலுக்கும் கண்டனம்!

அரசியலை விட்டு விலக தயார்.. ராகுல் காந்திக்கு சேலஞ்ச்.. குஷ்பு பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments