Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்கொல்லி புலியை கொல்லக் கூடாது..! – இயற்கை ஆர்வலர்கள் வழக்கு!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (11:09 IST)
மசினக்குடியில் நான்கு பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை கொல்லக் கூடாது என இயற்கை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நீலகிரி தேவன் எஸ்டேட் பகுதியில் மூன்று பேர் மற்றும் பசுமாடுகளை ஆட்கொல்லி புலி ஒன்று கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் அனைத்திலும் தப்பிய புலி தேவன் எஸ்டேட்டிலிருந்து மசினக்குடி நோக்கி நகர்ந்ததுடன் அங்கு மாடு மேய்த்த ஒருவரையும் அடித்துக் கொன்றது. அதிகமான மனித பலிகள் ஏற்பட்டு வருவதால் ஆட்கொல்லி புலியை தேவைப்பட்டால் சுட்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விலங்குகள் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு புலி ஆட்கொல்லியாக இருக்கிறது என்பதற்கான எந்த அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே புலியை சுட்டு பிடிக்க தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments