Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லா வெள்ளாட்டு கறியா வெச்சாங்க பாரு..! – ஆண்கள் மட்டும் நடத்தும் கறி விருந்து!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (10:58 IST)
கமுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவின் சிறப்பே ஆண்கள் மட்டுமே இந்த திருவிழாவை நடத்துவதுதான். முந்தைய காலத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பெண்ணாக இருந்த சமயம் சக பெண்களால் துன்புறுத்திக் கொள்ளப்பட்டதாகவும், அதனால் தனக்கு திருவிழாவை ஆண்களே நடத்த வேண்டும் என எல்லைப்பிடாரி அம்மன் கேட்டதன் பேரில் ஆண்டுதோறும் ஆண்களே இந்த திருவிழாவை கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்ட நிலையில் 47 கிடா ஆடுகள் வெட்டப்பட்டு அனைவருக்கும் கறிவிருந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த படையலை எடுத்து செல்லக் கூடாது என்பதால் மீத படையலை குழி தோண்டி புதைத்துள்ளார்கள். இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அசைவ பிரியர்கள் பலர் இதுகுறித்து சுவாரஸ்யமாக பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments