Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பேட்ஜெல்லாம் அணிய முடியாது - சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டவட்டம்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (11:50 IST)
சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ஜெல்லாம் அணிந்து விளையாட முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் வெடித்தன.
 
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பினர். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நடத்தினால் மைதானத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்திருந்தார்.
ரஜினிகாந்த் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அப்படி மீறியும் போட்டி நடைபெறுமாயின் சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினால், நம் எதிர்ப்பு நாடு முழுவதும் பிரதிபலிக்கும் என்று ரஜினி உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் யாரும் கருப்புப்பட்டை அணிந்து விளையாடமாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments