Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏதேனும் ஆனால் நாங்கள் பொறுப்பல்ல; வேல்முருகன்

சென்னை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏதேனும் ஆனால் நாங்கள் பொறுப்பல்ல; வேல்முருகன்
, திங்கள், 9 ஏப்ரல் 2018 (12:22 IST)
சென்னையில் தடையை மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றால், கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என தமிழக வாழ்விரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் ஒருவேளை நாளை தடையை மீறி சென்னையில் போட்டி நடைபெற்றால், மைதானத்திற்கோ கிரிக்கெட் வீரர்களுக்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
webdunia
இதனையடுத்து சென்னை வந்துள்ள சூப்பர் கிங்ஸ் வீர்ர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கபப்ட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்