Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தலையுடன் பிறந்த அதிசய கன்று – உயிர்பிழைக்குமா ?

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (14:29 IST)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விவசாயியின் மாடு ஒன்று இரண்டு தலையுள்ள கன்றை ஈன்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  மீனவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜா எனும் விவசாயி. சினையாக இருந்த இவரது மாடு இன்று காலை கன்று ஈன்றுள்ளது. ஆனால் அந்த கன்றை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயுள்ளனர். பிறந்த கன்று 4 கண்கள், 2 வாய், 2 மூக்குகளுடன் இருந்துள்ளது.

பொதுவாக இதுபோல பிறக்கும் கன்றுகள் பிறந்தவுடன் இறந்துவிடும். ஆனால் இந்த கன்றுக்கு உடலசைவுகள் இருந்ததால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ளார். கன்றை பரிசோதித்த அவர் கன்றின் உடலில் அசைவுகள் இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். அதற்குள் இந்த செய்தி பரவ பொதுமக்கள் வந்து அந்த கன்றை பார்த்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments