Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தலையுடன் பிறந்த அதிசய கன்று – உயிர்பிழைக்குமா ?

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (14:29 IST)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விவசாயியின் மாடு ஒன்று இரண்டு தலையுள்ள கன்றை ஈன்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  மீனவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜா எனும் விவசாயி. சினையாக இருந்த இவரது மாடு இன்று காலை கன்று ஈன்றுள்ளது. ஆனால் அந்த கன்றை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயுள்ளனர். பிறந்த கன்று 4 கண்கள், 2 வாய், 2 மூக்குகளுடன் இருந்துள்ளது.

பொதுவாக இதுபோல பிறக்கும் கன்றுகள் பிறந்தவுடன் இறந்துவிடும். ஆனால் இந்த கன்றுக்கு உடலசைவுகள் இருந்ததால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ளார். கன்றை பரிசோதித்த அவர் கன்றின் உடலில் அசைவுகள் இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். அதற்குள் இந்த செய்தி பரவ பொதுமக்கள் வந்து அந்த கன்றை பார்த்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments