Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயிற்றுக்குள் இருந்த 20 கிலோ கட்டி – அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை !

வயிற்றுக்குள் இருந்த 20 கிலோ கட்டி – அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை !
, புதன், 18 டிசம்பர் 2019 (09:03 IST)
சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வயிற்றில் இருந்த 20 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த  ரதி என்ற பெண்ணுக்கு கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வயிற்று வலி இருந்துள்ளது. எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் அவரது வயிறும் பெரிதாக ஆரம்பித்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் அவர் சென்று பரிசோதனை செய்ய அவர் வயிற்றில் சினைக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து கடந்தவாரம் அவரது வயிற்றில் இருந்த 20 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் ரதி நலமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க ரெண்டு பேரும் சிபிஐ அதிகாரிகள் – ஊரை ஏமாற்றிய இருவர் !