Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை தொழிலதிபர் கடத்தல்.. 9 பேரை கைது செய்த போலீசார்..!

Mahendran
வியாழன், 17 ஏப்ரல் 2025 (11:32 IST)
மதுரையை சேர்ந்த தொழிலதிபர் கடத்தப்பட்ட நிலையில், இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மதுரையை சேர்ந்த  சுந்தர் என்ற தொழிலதிபர், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக தனது வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், சுந்தருக்கு சொந்தமான  நிலத்தை சிலர் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
 
இந்த வழக்கில் சுந்தருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனை அடுத்து எதிர் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த நில விவகாரம் தொடர்பாக அடிக்கடி சுந்தருக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி, சுந்தரை மர்ம நபர்கள் கடத்தியதாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்ததை அடுத்து, போலீசார் இது குறித்து தீவிர விசாரணை செய்தனர். தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில்,  நேற்று முன்தினம் 5 பேரும், நேற்று 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த கடத்தல் சம்பவத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடிக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரைவில் அந்த ரவுடியும் கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருகரை காட்டி பெரியாரை கேவலப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது! - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்!

கேர்ள் பிரண்டை நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சித்த இளைஞர்.. இளம்பெண் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

விராத் கோலி - ஜெனிலியா சர்ச்சைக்குரிய விளம்பரம்: குவியும் கண்டனங்கள்.. மீண்டும் வைரலானது ஏன்?

அதிமுகவுக்கு நிர்வாகிகளே இல்லை.. ஈபிஎஸ் இடம் விஜயபாஸ்கர் கடும் வாக்குவாதம்.. பெரும் பரபரப்பு..!

மனைவி, இரு மகள்கள் மீது கோபம்.. 3 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நபர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments