Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீறி வந்த காளைகள்; சிதறி ஓடிய அமமுக தொண்டர்கள்! – புதுக்கோட்டையில் பரபரப்பு

Advertiesment
Tamilnadu
, திங்கள், 22 மார்ச் 2021 (12:42 IST)
புதுக்கோட்டையில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் காளைகள் புகுந்ததால் பரபரப்பு எழுந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் அமமுக பிரச்சார பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் மக்கள் முன்பு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஏராளமான அமமுகவினர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரு காளை மாடுகள் மக்கள் கூட்டத்தில் நுழைந்தன. சுற்றிலும் மக்கள் இருந்ததால் மிரட்சியடைந்த அவை கொம்புகளை காட்டி அச்சுறுத்தியவாறே நகர்ந்து சென்றன, இதனால் பதட்டமடைந்த அமமுகவினர் மற்றும் மக்கள் நாலா திசைகளிலும் சிதறி ஓடினர். இதனால் சில நிமிடங்கள் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9, 10, 11 வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அரசாணை ரத்தா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு