Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா-தம்பி பலி

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (07:45 IST)
சிவகங்கை அருகே நடந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு வனிதா என்ற மகளும், அகிலன் என்ற மகனும் இருந்தனர். வனிதா 10-ஆம் வகுப்பும், அகிலன் 9-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். அகிலாவிற்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்குவதால் அவருக்கு பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் வகுப்பு நடைபெற்று வந்தது. சம்பவத்தன்று வனிதாவை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது தாய் லட்சுமியும், தம்பி அகிலனும் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றனர். பின் அகிலாவை அழைத்துக் கொண்டு மூன்று பேருமாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவர்களின் இரு சக்கர வாகனத்தில் மீது மோதியது. இந்த விபத்தில் வனிதா மற்றும் அகிலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த அவர்களின் தாய் லட்சுமியை மீட்டு மருத்துவமைனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இச்சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments