Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதனை ஓட்டத்தில் சுவரை உடைத்து நின்ற மெட்ரோ ரயில்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

சோதனை ஓட்டத்தில் சுவரை உடைத்து நின்ற மெட்ரோ ரயில்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்
, புதன், 20 டிசம்பர் 2017 (23:35 IST)
டெல்லியில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலை வரும் 25ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க இருந்த நிலையில் இன்று அந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடந்தது

ஆனால் இந்த சோதனை ஓட்டத்தில் ரயில் பக்கவாட்டு சுவரில் மோதியதோடு, அந்த சுவரை உடைத்து கொண்டு விபத்துக்குள்ளானது. இதனால் மெட்ரோ ரயில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்

சரியான திட்டமிடல் இல்லாமல் அவசரகோலத்தில் சோதனை ஓட்டத்திற்காக அனுமதி அளிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிலையில் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் நான்கு மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது சசிகலா இறந்துவிட்டாரா? பிரபலத்தின் டுவீட்டால் பரபரப்பு