Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் பலி

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் பலி
, புதன், 20 டிசம்பர் 2017 (11:45 IST)
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 14 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவின் குரேஸ் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பனிப்பாறைகள் சரிந்து சோதனை சாவடி முழுதும் மூடப்பட்டது. அதில் பாதுகாப்பு பணியில் இருந்த  தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமானம் மூலம் அவரது உடல் தமிழகத்தை வந்தடைகிறது. பின் அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகம் கொடுத்து பேசாத எடப்பாடி: பாஜக மீது கடும் அதிருப்தி!