Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை புலிகள் மீதான தடை தவறானது; பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு! – சீமான் மகிழ்ச்சி ட்வீட்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (17:40 IST)
இலங்கையை மையமாக கொண்ட விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடை தவறானது என்று பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதுகுறித்து சீமான் மகிழ்ச்சியை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஈழ போரை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருதி தடைகள் விதிக்கப்பட்டன. தற்போது இலங்கையில் போர் முடிந்து விடுதலை புலிகள் அமைப்பும் சிதறுண்டு விட்ட நிலையிலும் அந்த அமைப்பின் மீதான தடை தொடர்ந்து வருகிறது. பிரிட்டனில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடை தவறானது என பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவது குறித்து பிரிட்டன் அரசுதான் முடிவெடுக்க முடியும். எனினும் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் ” பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தடை நீக்கத்தை முன்மாதிரியாகவும், ஊக்கமாகவும் கொண்டு உலக நாடுகள் யாவற்றிலும் புலிகள் மீதான தடை நீங்கச் சட்டப்போராட்டம் செய்திடுவோம். தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!!” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

தற்காப்புக்காக இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ளுங்கள்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments