Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திரிக்காய் விலை வீழ்ச்சி.. டிராக்டரை வைத்து செடியை அழிக்கும் விவசாயிகள்..!

Siva
வியாழன், 6 மார்ச் 2025 (15:47 IST)
கத்திரிக்காய் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. மொத்த கொள்முதல் சந்தையில், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.6 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்பனை ஆகுவதால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
 
நடவு, மருந்து, நீர், காய்கறி பறிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகளுக்கு கூட  விலை கிடைக்காமல் இருப்பதால், விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். வாகனச் செலவு கூடுதலாக உள்ளதால், சிலர் கத்திரிக்காய் செடிகளை தோட்டத்திலேயே டிராக்டர் வைத்து அழித்துவருகிறார்கள்.
 
கத்திரிக்காய் விலை சரிவால், மூன்று மாதமாக கடினமாக உழைத்த பயிர்களை அழிக்க நேர்ந்த நிலை, விவசாயிகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது, கத்திரிக்காய் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டுமே உள்ளது.
 
இதனால், அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments