Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திரிக்காய் விலை வீழ்ச்சி.. டிராக்டரை வைத்து செடியை அழிக்கும் விவசாயிகள்..!

Siva
வியாழன், 6 மார்ச் 2025 (15:47 IST)
கத்திரிக்காய் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. மொத்த கொள்முதல் சந்தையில், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.6 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்பனை ஆகுவதால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
 
நடவு, மருந்து, நீர், காய்கறி பறிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகளுக்கு கூட  விலை கிடைக்காமல் இருப்பதால், விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். வாகனச் செலவு கூடுதலாக உள்ளதால், சிலர் கத்திரிக்காய் செடிகளை தோட்டத்திலேயே டிராக்டர் வைத்து அழித்துவருகிறார்கள்.
 
கத்திரிக்காய் விலை சரிவால், மூன்று மாதமாக கடினமாக உழைத்த பயிர்களை அழிக்க நேர்ந்த நிலை, விவசாயிகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது, கத்திரிக்காய் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டுமே உள்ளது.
 
இதனால், அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments