சென்னையில் 9 சந்திப்புகளில் மேம்பாலம்: ரூ.796 கோடி மதிப்பில் திட்டம்..!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (15:06 IST)
சென்னையில் ஒன்பது இடங்களில் மேம்பாலம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக ரூ.796 கோடி மதிப்பில் திட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 
 
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது நெடுஞ்சாலை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் சென்னையில் ஒன்பது சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த திட்டங்களுக்காக ஒன்பது கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நில எடுப்பு பணிகள் உள்பட மற்ற அனைத்து பணிகளுக்கும்   மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் மேம்பாலம் அமையவிருக்கும் சந்திப்புகள் இவைதான்:
 
பி.டி. ராஜன் சந்திப்பு
 
அக்கரை சந்திப்பு
 
ஆவடி சந்திப்பு
 
சேலையூர் மற்றும் முகாம் சாலை சந்திப்பு
 
வேளச்சேரி தாம்பரம் சாலையில் கைவேலி சந்திப்பு
 
கொரட்டூர் சந்திப்பு
 
வானகரம் சந்திப்பு
 
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் சந்திப்பு
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments