Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
, வெள்ளி, 31 மார்ச் 2023 (19:24 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை  காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.

மேலும், தமிழகத்தில், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை,சேலம்,  ஈரோடு, கோவை,  திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருது நகர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 8 பேர் கைது!